Saturday, 29 March 2014

இயற்கை அழகும், மனித குணமும்

தினந்தோறும் நான் பயணிக்கும் இடங்களில் கடற்கரையும் ஒன்று. விடியற்காலையில் ஈரமண்ணாகவும், புகைமூட்ட வானமாக காட்சியளிக்கும் கடற்கரை மதிய நேரத்தில் தனது கடுப்பை வெயிலின் மூலமாக என்னிடம் தெரிவிப்பது போல் இருக்கு. மனிதன் செய்யக் கூடிய செயல்கள் இயற்கைக்கு எதிராக அமைவதன் விளைவாக தான் உலகம் முலுவதும் கடந்த சில ஆண்டுகளாக இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது. கடல் நீரின் அதிகரிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அது போல் உணவு சங்கிலியின் முதன்மையான இடத்தை பெற்றிருந்த புலிகள் இன்று 1000க்கும் குறைவாக உள்ளதென ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலை ஒரு அபாயகரமான நிலைக்கு மனித குலம் செல்கிறது என்பதை நிரூப்பிப்பது போல் உள்ளது. மனிதன் தனது வாழ்வியல் முறையை சுகமாக பயணிக்க தன்னைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களைக் கூட ரசிக்க தவறிவிடுகிறார்கள். எப்பொழுது மனிதன் இயற்கையின் போக்குக்கு தடைபோடாமல் ஓடும் நதி போல் தெளிவாக இருக்கின்றானோ அப்போது தான் அவனால் தெளிவாக சிந்திக்க முடியும். இயற்கையின் சிறப்பினை திருக்குறல் வாண் சிறப்பு எனும் அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

நீர் இன்று அமையாது உலகெனின்,யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு

பொருள்:- நீரை இன்றி உலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம் மனித குலத்தில் நிலைநாட்ட வேண்டுமென்றால் இயற்கையை மனிதன் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.

மனிதனுக்கு பயனுள்ளது அனைவருக்கும் நன்மை தருவது என்று தொன்றுகிறதோ அதை தேர்ந்தெர்டுத்து அதனையே விடாப்பிடியாக பின்பற்றுங்கள் என்று புத்தர் கூறியுள்ளார்.

மனித குனம்:-
சுனாமியில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் ஜப்பான், அமொரிக்கா போன்ற நாடுகள் முன்கூட்டியே கருவியை கண்டனர். ஆனால் உரிய நேரத்தில் அமரிக்கா நமக்கு சொல்லவில்லை. கேட்டால் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இந்திய பிரதமர் முகவரி அவர்களுக்கு தெரியவில்லையாம். அவர்கள் கூறியது சுத்த பொய். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள டிகோகார்சியா தீவு அமரிக்கா கப்பல் படை தளமாகும். இத்தீவுக்கு சுனாமி எச்சரிக்கையை முன்கூட்டியே தந்து அவர்களின் உயிரையும் உடமையையும் பாதுகாத்த அமெரிக்கா நமக்கு தராதது மனிதனின் ஏகாதிபத்தியத்தின் திமிரை வெளிகாட்டுவதாக உள்ளது.

குறிப்பு:-

மனித குனம் பற்றிய தகவல் எது மூட நம்பிக்கை என்னும் புத்தகத்தின் ஆசிரியர் அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.          


No comments:

Post a Comment